மந்திரம் படிக்கும் பயிற்சியை

மந்திரம் படிக்கும் பயிற்சியை விடியற்காலையில் மேற்கொள்வதால் தேவாதி தேவா்களின் பார்வையில் நாம் இருப்போம். அது பரம்ம முகூா்த்த நேரம் ஆகும். மன ஒருமைப்பாட்டுடன் மந்திரம் படிக்கலாம். அன்னை கூறியபடி “சக்திமயமாகி விடலாம்” அதாவது தெய்வீகம் தொடரும்.
சித்தா்கள் கண்ட குண்டலினி சக்தியின் சிறப்பின்படி, குண்டலினி விசுத்தி யோக சக்கரத்தில் நிலைபெற்றால் சதாசா்வ காலமும் இறைவனின் நினைவாகவே இருப்பார்கள். வேறு எந்தத் தாக்கமும் இருக்காது. மனம் அமைதி பெற்று, மௌனம் நீடிக்கும். எந்தப் பிரச்சனையாலும் கலக்கம் அடையமாட்டார்கள். ஆன்மா பரிசுத்த ஆன்மாவாகி, பண்பாளனாக ஆகிவிடுவீா்கள். தெய்வீகம் தொடரும். ஆன்மிக சிந்தனை ஏற்படும். தா்ம சிந்தனை பெற்று ஆற்றல் மிக்க மனிதனாகி எல்லோராலும் மதிக்கப்படுவார்கள். வணங்கப்படுவார்கள். இந்நிலையில் மனிதன் தெய்வ நிலைக்கு உயா்வடைகிறான்.

அத்தி

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம் – 4 கிராம், கால்ஷியம் – 200 மி.கி., இரும்பு – 4 மி.கி., வைட்டமின் – 100 ஐ.யு., தயாமின் – 0.10 மி.கி., கலோரி அளவு – 260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தியின் மருத்துவப் பயன்கள்
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.
அத்தி

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம் – 4 கிராம், கால்ஷியம் – 200 மி.கி., இரும்பு – 4 மி.கி., வைட்டமின் – 100 ஐ.யு., தயாமின் – 0.10 மி.கி., கலோரி அளவு – 260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தியின் மருத்துவப் பயன்கள்
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும். 

BY : இன்று ஒரு தகவல்

தாமஸ் அல்வா எடிசன்

காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி. அப்படி எடிசன் என்ன தான் செய்து விட்டார் என்று பார்க்கறீர்களா? ஆம் மக்களே ஒலிபெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி, கிராம‌போன், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி(காமிரா) என மலைக்க வைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர் கடவுளல்ல; சிறுவயதில் ‘மக்கு’ என்று பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி.

எடிசன் ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும், ஓர் ஆசிரியைக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிப்ரவரி மாதம் 11 ம் தேதி 1847ல் அமெரிக்காவிலுள்ள ‘மிலன்’ எனும் ஊரில் பிறந்தவர். ‘எதற்கும் உதவாதவன்’ என்று பள்ளியிலிருந்து துரத்தப்பட்ட எடிசன் தன தாயாரிடமே அடிப்படைக் கல்வியை கற்றார். தன பதிமூன்றாவது அகவையில் கிராண்ட் டிரங்க் தொடர்வண்டி சாலையில் செய்தித்தாள் போடும் பையனாக சேர்ந்தவர், அங்குள்ள சரக்கு ஏற்றும் பெட்டியை வேதியியல் சோதனைச்சாலையாக மாற்றியும், அங்கேயே ஒரு அச்சகத்தை தன தந்தையின் உதவியால் நிறுவி ‘கிரான்ட் டிரங்க் ஹெரல்ட்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். சோதனைச் சாலையில் பற்றிய ‘தீ’ அவர் செயற்கூடத்தை நாசமாக்கவே அமெரிக்காவில் எங்கெல்லாம் ‘தந்தி செயலி’ வேலை கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடோடி வேலை செய்தும் தன் சோதனை முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். பின்னர் போஸ்டனிலுள்ள ‘வெஸ்டர்ன் பணமாற்று’ அலுவலக பணியையும் மறுத்துவிட்டு முழு நேர‌ ஆராய்ச்சியில் ஈடுபட்டார் எடிசன்.

தன் முதல் கண்டுப்பிடிப்பான ‘மின்சார வாக்குப்பதிவு’ இயந்திரத்திக்கு 1869ம் ஆண்டு காப்புரிமை கிடைத்தும் அரசியல்வாதிகள் அதை செயற்படுத்த விருபவில்லை. இதை எண்ணிப் பார்த்த எடிசன் ‘மக்களுக்கு வேண்டாத பொருட்களை கண்டுப்பிடிப்பதில் நேரத்தை வீணாக்கக்கூடாது’ என மக்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்களைக் கண்டறிந்தார். தன் கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை, வழக்குகள் என அனைத்தையும் எதிர்நின்று சாதித்தார் எடிசன்.

இதன் இடைவெளிகளில் அவர் மண‌முடிக்கவே அவருக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் ‘டாட்,டாஷ்’ என தந்தி சங்கேத மொழியிலேயே செல்லப் பெயரிட்டார்.

சினிமா, புகைப்படக் கலை வளர்ச்சிக்கு எடிசன் தான் முழுமுதற் உழைப்பாளி என்றால் அது மிகையாகாது. ஆம் ஒளிப்பதிவுக் கருவியையும், பேச்சு வரும் கைநெட்டோபோன் கருவியையும் எடிசனே கண்டறிந்தார்.

எடிசன் கண்டுப்பிடிப்புகளின் நினைவாக அவரது நெருங்கிய நண்பர் ‘ஹென்றி போர்ட்’ அவரது ‘சோதனைச் சாலையை’அருங்கட்சியகமாகவே மாற்றி அமைத்தார். வாழ்வின் இறுதி நாட்களில் சுயநினைவற்ற கோமா நிலையில் இருக்கும்போதே எடிசனின் உயிர் 1931ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள ‘க்லேன்மொன்ட்’ எனப்படும் அவர் இல்லத்தில் பிரிந்தது.

அண்டம் கட‌வுளால் தான் உருவாகிறது என்பதை பொய்ப்பித்துக்காட்டி விஞ்ஞானத்திலே இவ்வுலகம் சுழல்கிறது என்று நிரூபித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சான்றாக வெற்றிக்கான ஆன்ம‌ பலத்தோடு வாழ்ந்து சாதித்தவர் எடிசன்!

எண்ணெய்’களின் இயற்கை நற்குணங்கள்…

தற்போதய நவீன உலகில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு தவிர வேறு எதற்காகவும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு சருமப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்திற்கு பளபளப்பும் தருகிறது என்பதனாலேயே பண்டைய காலங்களில் எண்ணெய் குளியல் பரிந்துரைக்கப்பட்டது. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் பல சிகிச்சைகளுக்கு எண்ணெய் வகைகளை பரிந்துரை செய்யப்படுகிறது.

ஆலிவ், எள், கடுகு, தேங்காய், பாதாம், சூரிய காந்தி, ஆமணக்கு முதலியவற்றில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை மசாஜ் செய்யப் பயன்படுத்தப் படும் எண்ணெய்கள் ஆகும்.

வெப்பத்தை தடுக்க..

எள் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் லேசானது; வாசனை அற்றது; நம் சருமத்தால் சுலபமாக உள்ளிழுக்கப் படுவது. இந்த எண்ணை சமச்சீரான எண்ணெய் என்பதால் எல்லா தோஷங்களுக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம். எள்ளில் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை தடுக்கும் பொருட்களான SPF உள்ளது. அதனால் தோலில் ஏற்படும் சின்னச்சின்ன தடிப்புகள், கட்டிகள் இவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. விட்டமின் E, தாதுப் பொருட்கள், புரதப் பொருட்கள், லேசிதின் நிறைந்துள்ள எண்ணெய் இது.

குளிர் காலத்தில் காக்க..

ஆலிவ் எண்ணெய் மிக இலேசானது. நம் உடலில் இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை சீராக வைக்க உதவுகிறது. பாதாம் எண்ணெய் உலர் சருமம் இருப்பவர்களுக்கு மிக நல்லது. இதுவும் மசாஜ் எண்ணெய் தான். குளிர் காலத்தில் சருமத்தைக் காக்க உதவும்.

நறுமண மசாஜ் எண்ணெய்

ரோஜா, சந்தனக் கட்டை, மல்லிகை, லாவண்டர் ஆகியவற்றில் இருக்கும் நறுமணம் இந்த அத்தியாவசிய எண்ணெய்களினால் வருபவை. அதனால் இவற்றை அப்படியே பயன்படுத்தக் கூடாது. பிழிந்தெடுத்த எண்ணைகளுடனோ அல்லது ரோஸ் வாட்டருடன் கூடவோ சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்க வேண்டும்.

பாதாம், எள் எண்ணையுடன், சில துளிகள் ரோஸ் அல்லது சந்தன எண்ணெய் சேர்த்து கலந்தால் நறுமணம் மிக்க உடல் மசாஜ் எண்ணெய் கிடைக்கும். சந்தன எண்ணெய் சொறி, சிரங்குகளிலிருந்து காக்கும். ரோஸ் எண்ணெய் நல்ல இரத்த ஓட்டத்துக்கும், சருமத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவும். இந்த இரண்டு எண்ணைகளும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றன. 50 கிராம் பிழிந்தெடுத்த எண்ணையுடன் 5 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து நறுமண மசாஜ் எண்ணை தயாரிக்கலாம்.

கூந்தல் பாதுகாப்பிற்கு…

முட்டை மஞ்சள் கருவுடன் சில துளி ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சருமம் வெளுக்க இத்துடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து பூசலாம்.

முட்டையின் மஞ்சள் கருவுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவலாம். உலர்ந்த கூந்தல், நுனி பிளந்த கூந்தல் இவற்றிற்கு மிகச் சிறந்த நிவாரணம் தரும் இந்தக் கலவை.

இளம் குழந்தைகளின் உச்சந்தலையில் செதில் செதிலான சருமம் காணப்படும். இவற்றை அப்படியே கையால் பிய்த்து எடுக்கக் கூடாது. சுத்தமான ஆலிவ் எண்ணையை சிறிதளவு பஞ்சில் தோய்த்து இவற்றின் மேல் தடவ வேண்டும். அடுத்தநாள் இவை மிருதுவாகி விடும். பேபி ஷாம்பூ போட்டு தலையை அலசினால் போய்விடும்.

கரு வளையங்கள் போக்க…

கண்ணுக்கு கீழே கருவளையம் உள்ளவர்கள், சுத்தமான பாதாம் எண்ணெய்யை கண்ணுக்குக் கீழ் தடவி மோதிர விரலால் நிதானமாக வட்ட வடிவில் ஒரு நிமிட நேரம் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.

கைகளுக்கு பாதுகாப்பு..

கைகளுக்கு எள் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் நன்றாகப் பூசி ½ தேக்கரண்டி சர்க்கரையை ஸ்கரப்பர் (scrubber) போலத் தேய்க்கவும். சர்க்கரை முழுவதும் கரைந்த பின் கைகளை ஒரு ஈரத் துவாலையால் துடைக்கவும்.

பாதாம் எண்ணெய்யை சுட வைத்து நகங்கள் மற்றும் அவற்றை சுற்றி இருக்கும் தோலின் மேலும் மசாஜ் செய்யுங்கள். இதை முழங்கால், முழங்கைகளிலும் தேய்க்கலாம்.

BY : தமிழ்ச் சமுதாயம்